states

img

நொய்டா – அரசு தேர்வுகளில் மோசடி செய்ததாக முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் கைது  

அரசு தேர்வுகளில் மோசடி செய்ததாக 3 முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நொய்டா - அரசுத் தேர்வில் பெரிய அளவில் மோசடி செய்ததாக 3 முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 10 பேரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சட்டவிரோதமாக வினாத்தாள்களை கசியவிட்டதாகவும்,  மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் போலியான தேர்வர்களை வைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் இதுகுறித்து விசாரணை செய்ததில் இந்த கும்பல் ஒரு வேட்பாளரிடம் சுமார் ரூபாய் 30 லட்சம் வசூலிப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;